search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை காந்திபுரம் பஸ் நிலையம்"

    • கோவை புறநகர் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பணி நிமித்தமாகவும், கல்லூரி படிப்பு விஷயமாகவும் கோவை மாநகருக்கு வருகின்றனர்.
    • பஸ் நிலையத்தில் இருந்த பெண்கள் முகம் சுளித்தனர். இதனை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர்.

    கோவை:

    கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் தினமும் ஏராளமான தனியார் பஸ் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    கோவை புறநகர் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பணி நிமித்தமாகவும், கல்லூரி படிப்பு விஷயமாகவும் கோவை மாநகருக்கு வருகின்றனர். இதற்கு அவர்கள் பெரும்பாலும் பஸ் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று இரவு கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் தனியார் பஸ் ஊழியர்கள் சிலருக்கும், வாலிபர் ஒருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

    அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. ஆபாச வார்த்தைகளால் பேசி ஒருவருக்கு ஒருவர் மாறி, மாறி தாக்கிக் கொண்டனர்.

    அவர்கள் பேசிய ஆபாச வார்த்தைகளால் பஸ் நிலையத்தில் இருந்த பெண்கள் முகம் சுளித்தனர். இதனை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர்.

    இந்த காட்சிகளின் அடிப்படையில் காட்டூர் போலீசார் அடிதடியில் ஈடுபட்ட தனியார் பஸ் ஊழியர்கள் மற்றும் வாலிபர்கள் சிலரை இன்று காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முடிவில் அவர்கள் மீது வழக்குப் பதிவு, கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரியவந்துள்ளது. கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் அடிக்கடி பஸ் ஊழியர்கள், வாலிபர்கள் இடையே தகராறு ஏற்பட்டு வருவதாகவும், இதனைத்தடுக்க இரவு நேரத்தில் அங்கு கூடுதலாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×